sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தோமூர் உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

/

தோமூர் உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

தோமூர் உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

தோமூர் உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு


ADDED : டிச 14, 2024 09:06 PM

Google News

ADDED : டிச 14, 2024 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூண்டி:பூண்டி ஒன்றியம், தோமூரில், 30 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் காந்தி கிராமம், காஞ்சிபாடி, தோமூர், ராமஞ்சேரி இருளர் காலனியைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் மேல்நிலை வகுப்பு பயில கனகம்மாசத்திரம் அல்லது திருவள்ளுர் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இந்த மாணவர்கள் படிப்பை தவிர்த்து வருகின்றனர்.

குறிப்பாக, பெண் குழந்தைகளை வெளி ஊர்களுக்கு சென்று பயில பெற்றோர் அனுமதிப்பதில்லை. இதனால், இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், கடந்த கல்வியாண்டில், 164 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த, பள்ளிக் கல்வி துறை தீர்மானித்தது. அதில் இப்பள்ளி இடம் பெறாத நிலையில் பழங்குடியின மாணவர்கள் அதிகம் பயிலும் இந்த பள்ளியை வரும் ஆண்டில் தரம் உயர்த்த கல்வித் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us