sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 சர்வீஸ் சாலையில் தவறான வழிகாட்டி பலகை வாகன ஓட்டிகள் குழப்பம்

/

 சர்வீஸ் சாலையில் தவறான வழிகாட்டி பலகை வாகன ஓட்டிகள் குழப்பம்

 சர்வீஸ் சாலையில் தவறான வழிகாட்டி பலகை வாகன ஓட்டிகள் குழப்பம்

 சர்வீஸ் சாலையில் தவறான வழிகாட்டி பலகை வாகன ஓட்டிகள் குழப்பம்


ADDED : டிச 26, 2025 06:48 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருநின்றவூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர்குளம் அருகில் தவறான திசையில் அமைக்கப்பட்ட வழிகாட்டி பலகையால், வாகன ஓட்டிகள் குழப்பமடைந்து வருகின்றனர்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், திருவள்ளூர் வரை அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, பெரும்பாக்கம் ஏரி, காக்களூர், தண்ணீர்குளம் கடந்து, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக, திருநின்றவூர் தனியார் ஸ்டீல் கம்பெனி அருகே இணைக்கும் பணி, 364 கோடி ரூபாய் மதிப்பில், 2022ம் ஆண்டு துவங்கியது.

திருவள்ளூர் - திருநின்றவூர் வரை, 17.5 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு, தற்போது வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இச்சாலையில் இருந்து தலக்காஞ்சேரி, தண்ணீர்குளம் உட்பட பல்வேறு இடங்களில், அருகே உள்ள ஊர்களுக்கு வாகனங்கள் செல்லும் வகையில், 'சர்வீஸ்' சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

சர்வீஸ் சாலை துவங்கும் இடங்களில், வாகன ஓட்டிகள் அறிந்து கொள்வதற்காக, சாலையோரம் பெயர் பலகை அமைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு, தண்ணீர்குளம் பிரிவு அருகில் அமைக்கப்பட வேண்டிய வழிகாட்டி பலகை, அச்சாலை முடிவடையும் இடத்தில் தவறாக அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, திருநின்றவூர் பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், தண்ணீர் குளம், புட்லுார் மற்றும் காக்களூர் கிராமத்திற்கு செல்ல வழி தெரியாமல் குழப்பமடைந்து வருகின்றனர்.

எனவே, வழிகாட்டி பலகையை, தண்ணீர்குளம் திரும்பும் பிரிவு சாலை அருகில் அமைக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திற்கு, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்






      Dinamalar
      Follow us