sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இந்தியன் ஆயில் எரிவாயு முனைய தொழிலாளர்கள் 2 நாளாக போராட்டம்

/

இந்தியன் ஆயில் எரிவாயு முனைய தொழிலாளர்கள் 2 நாளாக போராட்டம்

இந்தியன் ஆயில் எரிவாயு முனைய தொழிலாளர்கள் 2 நாளாக போராட்டம்

இந்தியன் ஆயில் எரிவாயு முனைய தொழிலாளர்கள் 2 நாளாக போராட்டம்


ADDED : நவ 09, 2025 03:18 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்: இந்தியன் ஆயில் எரிவாயு முனையத்தின் தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு முனையம் உள்ளது. இங்கிருந்து, எல்.பி.ஜி., டேங்கர் லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 'பாட்டலிங் பாயிண்ட்' எனபடும் சிலிண்டரில் நிரப்பும் ஆலைகளுக்கு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த எரிவாயு முனையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, குழு விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. அதை தொடர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள், இரண்டாவது நாளான நேற்றும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், அவர்களிடம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us