sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 வடாரண்யேஸ்வரர் கோவிலில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

/

 வடாரண்யேஸ்வரர் கோவிலில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

 வடாரண்யேஸ்வரர் கோவிலில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

 வடாரண்யேஸ்வரர் கோவிலில் விடுதி வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்


ADDED : டிச 28, 2025 06:15 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் வகையில் விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர், வெளியூர்களில் இருந்து தினமும் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அதேபோல், இக்கோவிலின் முக்கிய விழா நாட்களான பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி போன்ற நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.

மேலும், வாரந்தோறும் சனிக்கிழமை மாந்தீஸ்வரர் பூஜையில் 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் தங்குவதற்கு போதிய விடுதி வசதி இல்லாததால், தனியார் விடுதிகளில் தங்க வேண்டியுள்ளது.

இதை பயன்படுத்தி, தனியார் தங்கும் விடுதியில் அதிக பணத்தை வசூலிப்பதாக புலம்புகின்றனர்.

இதன் காரணமாக, இரவில் தங்க முடியாமல் தரிசனம் முடிந்ததும், அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விடுகின்றனர்.

எனவே, பக்தர்களின் நலன் கருதி, வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட இடத்தில் குளியலறையுடன் கூடிய விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us