/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெத்ஆம்பெட்டமைன் பறிமுதல் 'இன்ஸ்டாகிராம் டான்சர்' கைது
/
மெத்ஆம்பெட்டமைன் பறிமுதல் 'இன்ஸ்டாகிராம் டான்சர்' கைது
மெத்ஆம்பெட்டமைன் பறிமுதல் 'இன்ஸ்டாகிராம் டான்சர்' கைது
மெத்ஆம்பெட்டமைன் பறிமுதல் 'இன்ஸ்டாகிராம் டான்சர்' கைது
ADDED : அக் 25, 2025 11:18 PM

திருவள்ளூர்: திருவள்ளூரில் மெத்ஆம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த, சென்னையைச் சேர்ந்த 'இன்ஸ்டாகிராம்' பிரபல டான்சரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் இன்ஸ்பெக்டர் பாரூக் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெங்கத்துாரில், கடந்த 23ம் தேதி நள்ளிரவு 12:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவரை சோதனை செய்ததில், 55 கிராம் மெத்ஆம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், அவரிடமிருந்து ஐபோன், 21 சிறிய ஜீப் லாக் கவர், ஒரு எடை மிஷின் உட்பட 33 பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சென்னை ராமாபுரம், முல்லை நகரைச் சேர்ந்த சிபிராஜ், 22, என்பது தெரிய வந்தது. இவர், இன்ஸ்டாகிராம் பிரபல டான்சர் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார், சிபிராஜை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

