sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு கல்லுாரியில் புதிய பாடப்பிரிவுகள் வரும் 27க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

/

அரசு கல்லுாரியில் புதிய பாடப்பிரிவுகள் வரும் 27க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

அரசு கல்லுாரியில் புதிய பாடப்பிரிவுகள் வரும் 27க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

அரசு கல்லுாரியில் புதிய பாடப்பிரிவுகள் வரும் 27க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்


ADDED : மே 16, 2025 10:15 PM

Google News

ADDED : மே 16, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024 - 25ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

இங்கு, இரண்டு சுழற்சிகளில் வகுப்புகள் நடைபெறுகிறது. சுழற்சி -1ல் இளநிலை தமிழ், ஆங்கிலம், அரசியல் அறிவியல், வரலாறு, பொருளியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவர உயிரி தொழில்நுட்பவியல், கணிணி பயன்பாட்டியல், வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சுழற்சி - 2-ல் இளநிலை வரலாறு, இயற்பியல், வேதியியல், தாவர உயிரி தொழில்நுட்பவியல், கணிணி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், இந்த கல்வியாண்டு முதல், புதிதாக சுழற்சி - 2-ல், தமிழ் வழியில் பொருளியல், அரசியல் அறிவியல், வணிகவியல் மற்றும் வணிக கூட்டுறவியல் ஆகிய பாடப்பிரிவுகளும் துவங்கப்பட்டு உள்ளதால் அதற்கும் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு, www.tngasa.in என்ற இணையதளத்தில், வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், கல்லுாரியில் அமைந்துள்ள உதவி மையத்தை அணுகி கூடுதல் விபரங்களை பெறலாம் என, கல்லுாரி முதல்வர் தில்லைநாயகி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us