/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு நேர்முக தேர்வு
/
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு நேர்முக தேர்வு
ADDED : செப் 05, 2025 09:27 PM
திருவள்ளூர்:ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு இன்றும், நாளையும் நேர்முக தேர்வு நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்ட '108' ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் யுவராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு, இன்று திருத்தணி அரசு மருத்துவமனையிலும், நாளை திருவள்ளூர் பி.டி.ஓ., அலுவலகத்திலும் நடக்கிறது.
மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதியாக, பி.எஸ்சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., -- ஏ.என்.எம்., - - டி.எம்.எல்.டி., அல்லது அறிவியல் சார்ந்த பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயது 19 - -30க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் 21,320 ரூபாய் வழங்கப்படும்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் 21,120 ரூபாய் வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.