/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முட்புதருக்குள் இருளஞ்சேரி சுடுகாடு
/
முட்புதருக்குள் இருளஞ்சேரி சுடுகாடு
ADDED : டிச 18, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், இருளஞ்சேரி பகுதிவாசிகள் இறந்தவர்களை அடக்கம் மற்றும் எரியூட்டுவதற்காக கூவம் ஆற்றின் கரையோரம் சுடுகாடு அமைந்துள்ளது.
இதில், இறந்தவர்களை எரியூட்டும் பகுதியில் சுடுகாடில் முட்புதர்கள் வளர்ந்து உள்ளன. இதனால், இறந்தவர்களை எரியூட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், சுடுகாடு பகுதிக்கு சுற்றுச்சுவர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சியில் ஆய்வு செய்து, சுடுகாடு பகுதியில் உள்ள புதர்களை அகற்றவும், சுற்றுச்சவர் கட்டி, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருளஞ்சேரி பகுதிவாசியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.