sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூரை சுத்தப்படுத்த ஒரு நாள் போதுமா? ஒட்டுமொத்த 'கிளீனிங்' செய்த நகராட்சிக்கு கேள்வி!

/

திருவள்ளூரை சுத்தப்படுத்த ஒரு நாள் போதுமா? ஒட்டுமொத்த 'கிளீனிங்' செய்த நகராட்சிக்கு கேள்வி!

திருவள்ளூரை சுத்தப்படுத்த ஒரு நாள் போதுமா? ஒட்டுமொத்த 'கிளீனிங்' செய்த நகராட்சிக்கு கேள்வி!

திருவள்ளூரை சுத்தப்படுத்த ஒரு நாள் போதுமா? ஒட்டுமொத்த 'கிளீனிங்' செய்த நகராட்சிக்கு கேள்வி!


ADDED : செப் 25, 2024 07:26 AM

Google News

ADDED : செப் 25, 2024 07:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : திருவள்ளூர் நகராட்சி ஒன்றாவது வார்டு பகுதியில் நேற்று சுகாதார ஊழியர்கள், ஒட்டுமொத்த சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி தொடருமா அல்லது ஒரு நாள் கூத்தா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, தினமும், மக்கும் மற்றும் மக்காத குப்பை என, 45 ஆயிரம் டன் குவிகிறது.

இந்த குப்பையை அகற்ற, நகராட்சி மற்றும் தனியார் ஊழியர்கள், 210க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமும், வீடுகள் தோறும் சேகரமாகும் குப்பையை தனியார் ஊழியர்கள் நேரடியாக சென்று, சேகரித்து வருகின்றனர். இருப்பினும், பொதுமக்கள் சிலர், தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்காமல், தெருக்களில் வீசி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இந்நிலையில், நகரவாசிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கமிஷனர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில், நேற்று, ஒன்றாவது வார்டு பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடந்தது.

நுாற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், ஜெ.ஜெ.நகர், உள்ளிட்ட பகுதி களில், துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு வார்டில் ஒரு நாளில் நடந்த துப்புரவு பணி, அனைத்து வார்டுகளிலும் தொடருமா அல்லது இந்த ஒரு நாளுடன் இப்பணி முடிவடையுமா என, சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us