sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பூவலம்பேடு போலீஸ் பூத் முழு நேரம் செயல்படுமா?

/

பூவலம்பேடு போலீஸ் பூத் முழு நேரம் செயல்படுமா?

பூவலம்பேடு போலீஸ் பூத் முழு நேரம் செயல்படுமா?

பூவலம்பேடு போலீஸ் பூத் முழு நேரம் செயல்படுமா?


ADDED : ஜன 01, 2024 06:23 AM

Google News

ADDED : ஜன 01, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநிலம் சத்தியவேடு மற்றும் தமிழக பகுதியான கவரைப்பேட்டையை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பூவலம்பேடு பஜார் பகுதி.

இரு மாநிலங்களை இணைக்கும் அந்த சாலையில் உள்ள, முக்கிய சந்திப்பு பகுதியாகும். அங்கிருந்து தேர்வாய் கண்டிகை சிப்காட் சாலை பிரிகிறது. மேலும், சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்லும் முக்கிய சந்தை பகுதியாகும்.

அங்கிருந்து 12 கி.மீ., தொலைவில், பாதிரிவேடு போலீஸ் நிலையம் இருப்பதால், பூவலம்பேடு பஜார் பகுதியில், வங்கி அருகே நான்கு ஆண்டுகளுக்கு முன் 'போலீஸ் பூத்' திறக்கப்பட்டது. ஒரு சில தினங்கள் மட்டுமே செயல்பட்ட அந்த 'போலீஸ் பூத்', அதன் பின் முறையாக செயல்படவில்லை.

எப்போதாவது திறக்கப்படுகிறது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதிக அளவில் மக்கள் கூடும் முக்கிய சந்திப்பு என்பதை கருத்தில் கொண்டு, பகுதியினர் பாதுகாப்பு கருதி, அந்த 'போலீஸ் பூத்'தை முழு நேரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us