sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பராமரிப்பில்லாத 'அம்மா' பூங்கா மதுக்கூடமாக மாறி வரும் அவலம்

/

பராமரிப்பில்லாத 'அம்மா' பூங்கா மதுக்கூடமாக மாறி வரும் அவலம்

பராமரிப்பில்லாத 'அம்மா' பூங்கா மதுக்கூடமாக மாறி வரும் அவலம்

பராமரிப்பில்லாத 'அம்மா' பூங்கா மதுக்கூடமாக மாறி வரும் அவலம்


ADDED : பிப் 07, 2024 11:16 PM

Google News

ADDED : பிப் 07, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்தூர்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துார் ஊராட்சியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடாரம் அமைக்கும் பணி, 2018 பிப்ரவரியில் துவங்கி, 2020ம் ஆண்டு நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த பூங்காவில் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், போதிய பராமரிப்பும் மற்றும் பகுதிவாசிகளிடம் விழிப்புணர்வு இல்லாததால் 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் முழுதும் முட்புதர்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது.

மேலும், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இதனால், 'அம்மா' பூங்கா மற்றும் பூங்காவில் உள்ள உடற்பயிற்சி கூடாரத்தை, 'குடி'மகன்கள் மதுக்கூடமாக மாற்றி விட்டனர்.

இது அப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் 'அம்மா' பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us