/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி மந்தம் 4 ஆண்டுகளாகியும் நிறைவேறாத அவலம்
/
ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி மந்தம் 4 ஆண்டுகளாகியும் நிறைவேறாத அவலம்
ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி மந்தம் 4 ஆண்டுகளாகியும் நிறைவேறாத அவலம்
ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி மந்தம் 4 ஆண்டுகளாகியும் நிறைவேறாத அவலம்
ADDED : பிப் 07, 2024 11:34 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில் இருந்த ஊராட்சி அலுவலகம் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்தது.
இதையடுத்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி நடந்து வருகிறது.
இந்த பணிகளை மூன்று மாதத்திற்கு நிறைவேற்ற திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருவதாக ஒன்றிய பொறியாளர் தெரிவித்திருந்தார். ஆனால், பணிகள் துவங்கி நான்காண்டுகளாகியும் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி மந்தகதியில் நடந்து வருவது பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றிய அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல், அலட்சியம் காட்டியதே இதற்கு காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணியை விரைந்து முடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

