sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரூ.2.30 கோடி நிதி ஒதுக்கி 6 மாதமாச்சு! வேளாண் அலுவலகம் கட்டும் பணி எப்போது?

/

ரூ.2.30 கோடி நிதி ஒதுக்கி 6 மாதமாச்சு! வேளாண் அலுவலகம் கட்டும் பணி எப்போது?

ரூ.2.30 கோடி நிதி ஒதுக்கி 6 மாதமாச்சு! வேளாண் அலுவலகம் கட்டும் பணி எப்போது?

ரூ.2.30 கோடி நிதி ஒதுக்கி 6 மாதமாச்சு! வேளாண் அலுவலகம் கட்டும் பணி எப்போது?


ADDED : மார் 29, 2025 02:30 AM

Google News

ADDED : மார் 29, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு வட்டார வேளாண் அலுவலகத்திற்க்கு உட்பட்டு கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு, திருவாலங்காடு, மணவூர் உட்பட நான்கு குறுவட்டங்களில் 42 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில், 50,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது.

தோட்டக்கலை பயிர்களான காய்கறி, பூ வகைகளும் குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடப்படுகின்றன. விவசாயிகள், வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்களை வாங்க, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் அருகே செயல்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டடம் சேதமடைந்து காணப்பட்டதால், அவை இடிக்கப்பட்டு, கடந்தாண்டு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையமாக உயர்த்தி புதிய கட்டடம் கட்ட முடிவானது.

இதையடுத்து, தற்காலிகமாக ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம், திருவாலங்காடில் பழையனூர் செல்லும் சாலையில் வாடகை கட்டடத்தில், ஆறு மாதத்திற்கும் மேலாக இயங்கி வருகிறது. இங்கு, இடநெருக்கடி உள்ளதாக வேளாண் அலுவலக ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

மேலும், விவசாயிகள் வேளாண் அலுவலகம் இருக்கும் இடத்தை அறியாமல் அலைந்து திரிந்து வந்து செல்லும் நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம் கட்டும் பணியை விரைந்து வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நிதி இருக்கு... இடமில்லை!

வேளாண் அலுவலகம் கட்டுவதற்கு, கடந்தாண்டே 2 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒதுக்கீடு செய்து, ஆறு மாதங்களான நிலையில், முன்பு வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலகம் செயல்பட்ட பகுதியில், பயன்பாடு இல்லாத வட்டார கல்வி அலுவலக கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் 10 சென்ட் நிலத்தில் அமைந்துள்ளது. இக்கட்டடத்தை இடித்துவிட்டு, நிலத்தை வேளாண் துறையிடம் ஒப்படைக்கும் பட்சத்தில், ஒன்பது மாதங்களுக்குள் வேளாண் கட்டடம் கட்டி முடிக்கப்படும். மாவட்ட வேளாண் அதிகாரி,திருவள்ளூர்.








      Dinamalar
      Follow us