sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்கம்பம் நட்டு ஆறு மாதம் ஆச்சு! இணைப்பு கொடுப்பது எப்போது?

/

மின்கம்பம் நட்டு ஆறு மாதம் ஆச்சு! இணைப்பு கொடுப்பது எப்போது?

மின்கம்பம் நட்டு ஆறு மாதம் ஆச்சு! இணைப்பு கொடுப்பது எப்போது?

மின்கம்பம் நட்டு ஆறு மாதம் ஆச்சு! இணைப்பு கொடுப்பது எப்போது?


ADDED : ஜன 20, 2025 01:54 AM

Google News

ADDED : ஜன 20, 2025 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தாராட்சி கிராமம். இங்கு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது.

இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலை ஒட்டி, சாலையோரம் உள்ள மின்கம்பம் நட்டு, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் தெரிந்த நிலையில் எப்போது உடைந்து விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இருந்தனர்.

புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கொடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த ஆறு மாதத்திற்கு முன், ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகள் சேதம் அடைந்த மின்கம்பம் அருகில் புதிய மின்கம்பம் நட்டனர். ஆனால் இணைப்பு கொடுக்கவில்லை.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பத்திற்கு இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us