sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கன்னிகாபுரம் நெடுஞ்சாலை வளைவுகளில் விபத்துகள் தடுக்க தகடுகள் அமைப்பு

/

கன்னிகாபுரம் நெடுஞ்சாலை வளைவுகளில் விபத்துகள் தடுக்க தகடுகள் அமைப்பு

கன்னிகாபுரம் நெடுஞ்சாலை வளைவுகளில் விபத்துகள் தடுக்க தகடுகள் அமைப்பு

கன்னிகாபுரம் நெடுஞ்சாலை வளைவுகளில் விபத்துகள் தடுக்க தகடுகள் அமைப்பு


ADDED : டிச 30, 2024 01:41 AM

Google News

ADDED : டிச 30, 2024 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,:திருத்தணியில் இருந்து, கன்னிகாபுரம் வழியாக மாம்பாக்கசத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.

அதிகாலை 4:00 மணி முதல், நள்ளிரவு 11:00 மணி வரை இச்சாலையில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் வாயிலாக, திருத்தணி பஜாருக்கும், தனியார் கம்பெனிக்கு செல்லும் ஊழியர்களும் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், மாம்பாக்கசத்திரம் - கன்னிகாபுரம் இந்திரா நகர் வரை, 7க்கும் மேற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலையில் அபாயகரமான வளைவுகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர்.

இதையடுத்து, வாகன ஓட்டிகள் நலன் கருதி, திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் முதற்கட்டமாக கன்னிகாபுரம் பகுதியில், சாலை வளைவுகளில், நேற்று முதல், அலுமினிய தகடுகளால் சாலையோரம் தடுப்புகள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, 7 இடங்களில் தடுப்புகள் அமைத்தும், தகடுகள் மீது வாகனங்கள்,மோதாமல் இருப்பதற்காக சிவப்பு விளக்குகள் அமைக்கப்படும். இதுதவிர சாலையோரம் ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக சாலையோரம் வளர்ந்து செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us