ADDED : ஆக 27, 2025 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மப்பேடு:வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மப்பேடு அடுத்த சத்தரை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய், 21. இவர் நேற்று முன்தினம் இரவு சத்தரை மதுபான கடையில் மது வாங்கி கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ஏகாட்டூர் பகுதியைச் சேர்ந்த தீபன்ராஜ், 25, என்பவர் முன் விரோதம் காரணமக தகராறில் ஈடுபட்டார்.
தகராறு முற்றவே தீபன்ராஜ் கத்தியால் குத்தியதில் சஞ்சய் காயமடைந்து பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதா ர நிலையத்தில் முதலுதவிக்குப்பின் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சஞ்சய் கொடுத்த புகாரின்படி, வழக்கு பதிந்த மப்பேடு போலீசார் தீபன்ராஜை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.