sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா

/

திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா

திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா

திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா


ADDED : ஜன 10, 2025 02:08 AM

Google News

ADDED : ஜன 10, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நேற்று, மார்கழி மாத கிருத்திகையையொட்டி மூலவருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, மூலவருக்கு தங்ககவசம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.

அதை தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த விழாவிற்கு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து பொது வழி மற்றும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழி போன்றவற்றில் நீண்ட வரிசையில் சென்று மூலவரை தரிசித்தனர்.

பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவிலுக்கு, இரண்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us