sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கிருத்திகை உத்சவம் கோலாகலம்

/

 கிருத்திகை உத்சவம் கோலாகலம்

 கிருத்திகை உத்சவம் கோலாகலம்

 கிருத்திகை உத்சவம் கோலாகலம்


ADDED : ஜன 01, 2026 05:02 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி கோவிலில் நேற்று, மார்கழி மாத கிருத்திகையை ஒட்டி, காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அதே போல், அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றம் சுப்ரமணிய சுவவாமி மலைக்கோவில், பள்ளிப்பட்டு அடுத்த கார்வேட்நகரம் குமரகிரி சுப்ரமணிய சுவாமி கோவில்களிலும், நேற்று கிருத்திகை உத்சவம் கோலாகலமாக நடந்தது.

நெல்லிக்குன்றம் மலைக்கோவிலில், மாலை 6:00 மணிக்கு உத்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், உள்புறப்பாடு எழுந்தருளினார். திரளான பக்தர்கள், ‛அரோகரா... அரோகரா' கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us