ADDED : பிப் 15, 2025 08:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்திரமணிசபர், 30; ஒரு மாதத்திற்கு முன் இவர், குடும்பத்துடன் பிழைப்பிற்காக, திருக்கண்டலம் அருகே, கல்மேடு பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சேர்ந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் உடல்சோர்வு காரணமாக திடீரென பணியின்போது, மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.