sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புதுார்மேடு நுாலக வாயிலில் குவிந்து வரும் மதுபாட்டில்கள்

/

புதுார்மேடு நுாலக வாயிலில் குவிந்து வரும் மதுபாட்டில்கள்

புதுார்மேடு நுாலக வாயிலில் குவிந்து வரும் மதுபாட்டில்கள்

புதுார்மேடு நுாலக வாயிலில் குவிந்து வரும் மதுபாட்டில்கள்


ADDED : ஏப் 03, 2025 02:41 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் புதுார்மேடு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை சுற்றியுள்ள பைவலசா, வெங்கடாபுரம், தாமரைக்குளம், தேவலாம்பாபுரம், கட்டாரிகுப்பம், விடியங்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு மையமாக அமைந்துள்ளது.

சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளவும், அன்றாட தேவைக்காகவும், தினசரி புதுார்மேடு கிராமத்திற்கு சென்று வருகின்றனர். புதுார்மேடு பேருந்து நிறுத்தம் அருகே, ஊராட்சி நுாலகம் செயல்பட்டு வருகிறது.

பல்வேறு ஊராட்சிகளில் நுாலகங்கள் செயல்படாமல் உள்ள நிலையில், இந்த நுாலகம் தொடர்ந்து முறையாக செயல்பட்டு வருகிறது. நாளிதழ்களும், புத்தகங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஏராளமான வாசகர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இரவு நேரத்தில் இந்த நுாலக வளாகத்தில் 'குடி'மகன்கள் மது அருந்தி வருகின்றனர். காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், வாசகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, நூலக வளாகத்தில் மது அருந்தும் மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us