நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:டாஸ்மாக் மதுக்கடை இயங்காத காலை நேரத்தில், கும்மிடிப்பூண்டி அருகே பாலகிருஷ்ணாபுரம் குடியிருப்பு பகுதியில் பிளாக்கில் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதே பகுதியை சேர்ந்த தனசீலன், 54, என்பவர் அவரது வீட்டின் அருகே மது விற்றது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம், 26 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.