/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டூ - வீலரில் மதுவிற்றவர் சிக்கினார்
/
டூ - வீலரில் மதுவிற்றவர் சிக்கினார்
ADDED : நவ 27, 2024 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி, இந்திரா நகர் பகுதியில், ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருத்தணி போலீசார் இந்திரா நகரில், நேற்று சோதனை செய்த போது, இருசக்கர வாகனத்தில் இருந்து மதுபாட்டில்கள் எடுத்து விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த பழனி, 46, என்பவரை, கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த, 17 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.