ADDED : ஏப் 25, 2025 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி பகுதிக்கு சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக எஸ்.பி., ஸ்ரீனிவாசபெருமாளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் நேற்று தமிழக- ஆந்திர மாநில எல்லையான திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த திருத்தணியை சேர்ந்த பாஸ்கரிடம் போலீசார் சோதனை செய்தனர். மூன்று லிட்டர் சாராயம் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.