ADDED : அக் 31, 2025 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: ஆந்திர மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஆந்திர மாநில மதுபாட்டில்கள், தமிழகத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் பொதட்டூர்பேட்டை அடுத்த கோரகுப்பம் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநில, 40 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில் மதுபாட்டில்கள் கடத்தியவர் வாலாஜா அடுத்த நீலகண்டராயன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 30 என தெரிய வந்தது. பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.

