/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
ADDED : மார் 18, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்; 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டம் நாளை ஊத்துக்கோட்டையில் நடக்கிறது.
கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, கலெக்டர் தலைமையிலான அனைத்து துறை அலுவலர்களும், மாதம் ஒரு வட்டத்தில் தங்கி, மக்கள் குறைகளை கேட்டு வருகின்றனர்.
இந்த திட்டத்தின்படி, ஊத்துக்கோட்டையில் நாளை கலெக்டர் தலைமையிலான அனைத்து துறை அலுவலர்களும் முகாமிட்டு, குறைகளை கேட்க உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.