ADDED : மே 12, 2025 12:37 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மாறாக மலைக் கோவிலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் காலை முதலே குவிந்தனர் .
இதனால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, இரண்டரை மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். அதே போல், நுாறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிப்பட்டனர்.
முன்னதாக நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
திருத்தணி டி.எஸ்.பி.,கந்தன் தலைமையில், 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.