ADDED : ஜூலை 04, 2026 03:56 AM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே லாரியை ஓட்டி சென்ற போது நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 50; லாரி ஓட்டுநர். நேற்று முன்தினம், சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து திருச்சி நோக்கி, லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தமிழக எல்லை நுழையும் இடத்தில் உள்ள எளாவூர் சோதனைச்சாவடியை அடைந்ததும், அவருக்கு நெஞ்சு வழி ஏற்பட்டது.
அவரே, 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து ஏறிக்கொண்டார். கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
