ADDED : ஜூலை 12, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி போலீசார் நேற்று, தமிழக - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த டிப்பர் லாரியை போலீசார் நிறுத்திய போது, ஓட்டுநர் சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார்.
விசாரணையில், அனுமதியின்றி எம் - சாண்ட் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார் விசாரிக் கின்றனர்.
