sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருமழிசை ஜெகந்நாதர் கோவிலில்  8ல் மகோற்சவம் துவக்கம்

/

திருமழிசை ஜெகந்நாதர் கோவிலில்  8ல் மகோற்சவம் துவக்கம்

திருமழிசை ஜெகந்நாதர் கோவிலில்  8ல் மகோற்சவம் துவக்கம்

திருமழிசை ஜெகந்நாதர் கோவிலில்  8ல் மகோற்சவம் துவக்கம்


ADDED : டிச 26, 2024 06:39 AM

Google News

ADDED : டிச 26, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை : திருமழிசை, ஜெகந்நாதர் பெருமாள் கோவிலில், தையில் மகம் திருஅவதார மகோற்சவம், வரும் 8ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடக்கிறது.

திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள ஜெகந்நாதர் பெருமாள் கோவிலில், எழுந்தருளியுள்ள 'பக்திஸாரர்' எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, 'தையில் மகம்' திருஅவதார மகோற்சவம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான தையில் மகம் திருஅவதார மகோற்சவம், நேற்று, காலை 9:00 மணிக்கு பந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

வரும் 6ம் தேதி, மாலை 6:00 மணி முதல், 7:00 மணிக்குள் ஆழ்வார் ஆஸ்தானம் விட்டு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

அதன்பின், தொடர்ந்து 12 நாட்கள், ஆழ்வாருக்கு தையில் மகம் திருஅவதார மகோற்சவ, விழாவில், காலை, மாலை சுவாமி பல்வேறு பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

முக்கிய நிகழ்வான 8ம் தேதி சிம்ம வாகனத்துடன் விழா துவங்குகிறது. 12ம் தேதி கருடசேவை, 16ம் தேதி தேரோட்டம், 20ம் தேதி மாலை விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us