/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் ஆண் உடல் மீட்பு
/
திருத்தணி கோவிலில் ஆண் உடல் மீட்பு
ADDED : மே 27, 2025 08:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில், 56 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் நேற்று இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருத்தணி போலீசார் விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் பெயர், விலாசம் தெரியவில்லை.
இறந்தவர் கடந்த சில மாதங்களாக மலைக்கோவிலில் தங்கிருந்து பக்தர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு வந்ததாக தெரிந்தது.

