ADDED : செப் 30, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் பகுதியில் உள்ள சர்ச் அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக, கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிந்தது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆண் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் பெயர், விலாசம் தெரியவில்லை.
கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.