நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமழிசை: நேமம் ஏரி அருகே ஆண் சடலத்தை மீட்ட வெள்ளவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருமழிசை அருகே நேமம் கிராமம் உள்ளது. இங்குள்ள நேமம் ஏரி அருகே உள்ள பள்ளத்தில், ஆண் சடலம் கிடப்பதாக, கிராம நிர்வாக அலுவலருக்கு, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து, குத்தம்பாக்கம் வி.ஏ.ஓ., அரவிந்தன் கொடுத்த புகாரின்படி, வெள்ளவேடு போலீசார் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

