/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயணியரிடம் தகராறு செய்தவர் கைது
/
பயணியரிடம் தகராறு செய்தவர் கைது
ADDED : ஜூலை 03, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த காசிநாதபுரம் நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியர் மற்றும் பொதுமக்களிடம் ஒருவர் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்கிற சதா, 36, என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே திருத்தணி காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.