sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

'ரீல்ஸ்' விடுவதில் தகராறு சிறுவனை தாக்கியவர் கைது

/

'ரீல்ஸ்' விடுவதில் தகராறு சிறுவனை தாக்கியவர் கைது

'ரீல்ஸ்' விடுவதில் தகராறு சிறுவனை தாக்கியவர் கைது

'ரீல்ஸ்' விடுவதில் தகராறு சிறுவனை தாக்கியவர் கைது


ADDED : மே 28, 2025 01:33 AM

Google News

ADDED : மே 28, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவரது வீட்டின் அருகே உள்ள கார்மென்ட்ஸ்சில் வேலை செய்து வருபவர் ரோஸ், 22. இவர்கள் இருவரும், இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு 'ரீல்ஸ்' செய்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன், ரோஸ் இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவிற்கு, சிறுவன் திட்டி 'கமென்ட்' செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரோஸ், தன் நண்பர்கள் சுசீல், லோகேஷ் ஆகியோருடன் திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சி சரஸ்வதி மில் அருகே வந்தனர்.

மொபைல் போனில் தொடர்பு கொண்டு, சிறுவனை அங்கு வரவழைத்து, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

இதில் தலையில் படுகாயம் அடைந்த சிறுவன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து சுசீலை கைது செய்து, லோகேஷ், ரோஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us