sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி செய்தவர் கைது

/

வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி செய்தவர் கைது

வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி செய்தவர் கைது

வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி செய்தவர் கைது


ADDED : செப் 02, 2025 12:23 AM

Google News

ADDED : செப் 02, 2025 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் தபால் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, 13 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

அரக்கோணம் மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர், விஜி, 40. இவருக்கு, திருவள்ளூர் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜீவானந்தன், 49 என்பவர் அறிமுகமானார்.

தபால் நிலைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, விஜியிடம் இருந்து 2022 ஜனவரி 1ம் தேதி ஜீவானந்தம் ஒன்பது லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். தொடர்ந்து பல தவணைகளாக 13 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

இந்நிலையில் வேலை வாங்கி தருவதில் தாமதம் ஏற்பட்டதால், விஜி பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதையடுத்து ஜீவானந்தம், 13 லட்சத்திற்கான வங்கி காசோலையை விஜியிடம் வழங்கியுள்ளார். வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியது.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் விஜி புகார் அளித்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் ஜீவானந்தனை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-






      Dinamalar
      Follow us