sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 சாலையில் தாறுமாறாக காரை ஓட்டி வாகனங்கள் மீது மோதியவர் கைது

/

 சாலையில் தாறுமாறாக காரை ஓட்டி வாகனங்கள் மீது மோதியவர் கைது

 சாலையில் தாறுமாறாக காரை ஓட்டி வாகனங்கள் மீது மோதியவர் கைது

 சாலையில் தாறுமாறாக காரை ஓட்டி வாகனங்கள் மீது மோதியவர் கைது


ADDED : டிச 08, 2025 06:25 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார்: கொளத்துார் அருகே மது போதையில் தாறுமாறாக காரை ஓட்டி, எதிரே வந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கொளத்துார், ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் அசோக் ராஜ், 28. இவர், நேற்று முன்தினம் மதுபோதையில், தன் 'ஸ்கோடா' காரை பேப்பர் மில்ஸ் சாலையில் தாறுமாறாக ஓட்டி, எதிரே வந்த கார் மீது மோதினார். சக வாகன ஓட்டிகள் அவரை பிடிக்க முயன்றனர்.

காரை நிறுத்தாமல் சென்ற அசோக் ராஜ், கொளத்துார் திருவீதி அம்மன் சாலை, காமராஜர் சாலை மற்றும் பெரியார் நகர் இ.பி., ஆபீஸ் சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஓட்டி, எதிரே வந்த பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியுள்ளார்.

தகவலறிந்த வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசார், அயனாவரம் பகுதியில் மது போதையில் இருந்த அசோக் ராஜை மடக்கி பிடித்து, கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் கார், பைக் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விபரம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us