ADDED : மே 15, 2025 09:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் தெக்களூர் பகுதியில் மதுபாட்டில்கள் வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் மேற்கண்ட பகுதியில் நேற்று சோதனை செய்தனர். அப்போது அதே பகுதி சேர்ந்த சேகர், 53 என்பவர் மதுபாட்டில்கள் கூடுதல் விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து போலீசார், 15 பாட்டில்கள் பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.