ADDED : மே 18, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் பயணி ஒருவரிடம் விசாரித்தனர். அவர், முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது உடைமைகளை சோதனையிட்டனர்.
அவரிடம் இருந்து, 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர், சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன், 40, என்பதும், ஆந்திராவில் இருந்து ரயில் வாயிலாக கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.