sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மணவாள நகரில் 1 வாரம் குடிநீரின்றி தவிப்பு

/

 மணவாள நகரில் 1 வாரம் குடிநீரின்றி தவிப்பு

 மணவாள நகரில் 1 வாரம் குடிநீரின்றி தவிப்பு

 மணவாள நகரில் 1 வாரம் குடிநீரின்றி தவிப்பு


ADDED : டிச 03, 2025 06:01 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெங்கத்துார்: வெங்கத்துார் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு மோட்டார் பழுதால் ஒரு வாரமாக குடிநீர் இல்லாமல் பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாளநகர். இப்பகுதி மக்களுக்கு வெங்கத்துார் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் பழுது ஏற்பட்டது சீரமைக்க நடவடிக்கை ஊராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை.

இதனால் மணவாளநகர், கபிலர் நகர் உட்பட சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் இல்லாமல் கடந்த ஒரு வாரமாக பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரி வெங்கத்துார் ஊராட்சியில் ஆய்வு செய்து புதிய மின்மோட்டாரை பழுது நீக்கி குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டுமென மணவாளநகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us