/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரே வாரத்தில் மேன்ஹோல் சேதம் வாகன ஓட்டிகள் அவதி
/
ஒரே வாரத்தில் மேன்ஹோல் சேதம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : பிப் 16, 2025 03:25 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது தொடுகாடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் நெடுஞ்சாலை வழியே தினமும், 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் தொடுகாடு பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது, ஸ்ரீபெரும்புதுாரில் நடந்து வந்த பாதாள சாக்கடை பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும், பாதாள சாக்கடை, 'மேன்ஹோல்' மூடி சேதமடைந்து மரணகுழிகளாக மாறியுள்ளது. இப்பகுதியில் காவல்துறை சார்பில், பேரிகார்டு வைக்கப்பட்டும் வாகன ஒட்டிகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பகுதிவாசிகள் கடும் அச்சத்துடன் சென்று வருவதாக நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பேரூராட்சி மற்றும நெடுஞ்சாலைத் துறையினர் பாதாள சாக்கடை மேன்ஹோல் பகுதி மற்றும் நெடுஞ்சாலையை ஒரு வாரத்திற்கு முன் சீரமைத்தனர்.
இந்நிலையில் தற்போது நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் பகுதியில் மீண்டும் சேதமடைந்துள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டு வருவதோடு அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் நெடுஞ்சாலையில் சேமதடைந்த மேன்ஹோல் பகுதியை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

