sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

'குடி'மகன்களின் கூடாரமான மப்பேடு சமுதாய நலக்கூடம்

/

'குடி'மகன்களின் கூடாரமான மப்பேடு சமுதாய நலக்கூடம்

'குடி'மகன்களின் கூடாரமான மப்பேடு சமுதாய நலக்கூடம்

'குடி'மகன்களின் கூடாரமான மப்பேடு சமுதாய நலக்கூடம்


ADDED : ஜூலை 07, 2025 02:39 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மப்பேடு:மப்பேடில், 50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால், 'குடி'மகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.

கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில், 50 லட்சம் ரூபாயில் சமுதாய நலக்கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு மப்பேடு கால்நடை மருத்துவமனை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, 2020ல் பணிகள் துவக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த கட்டுமான பணி, மூன்று மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.

ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், 'குடி'மகன்கள் மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, சமுதாய நலக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us