sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்' :காக்களூரில் அமைச்சர் அடிக்கல்

/

 ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்' :காக்களூரில் அமைச்சர் அடிக்கல்

 ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்' :காக்களூரில் அமைச்சர் அடிக்கல்

 ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்' :காக்களூரில் அமைச்சர் அடிக்கல்


ADDED : டிச 16, 2025 04:38 AM

Google News

ADDED : டிச 16, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: காக்களூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில், 'மினி ஸ்டேடியம்' அமைக்க, அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தமிழகம் முழுதும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், ஒரு 'மினி ஸ்டேடியம்' அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக அவசர அவசரமாக நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திருவள்ளூர் ஒன்றியம், காக்களூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறை சார்பில், 3 கோடி ரூபாய் மதிப்பில் முதல்வரின் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

கலெக்டர் பிரதாப் தலைமையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டி, பணியை துவக்கி வைத்தார்.

பின், அமைச்சர் கூறியதாவது:

காக்களூரில், 7 ஏக்கர் பரப்பளவில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 லட்சம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2.50 கோடி என, மொத்தம் 3 கோடி ரூபாய் மதிப்பில், சிறிய விளையாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது.

அங்கு, ஓடு தளம், நவீன உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறைகள், கூடைப்பந்து அரங்கு, கைப்பந்து அரங்கு, கோ-கோ அரங்கு ஆகியவை அமைக்கப்படும். அதேபோல், மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பூவலம்பேடு ஊராட்சியிலும், சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமிர்ந்தமங்கலம் கிராமத்தில், மினி ஸ்டேடியம் ஏற்படுத்த உள்ள இடத்தை பல ஆண்டுகளாக, ஏழு குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர். வாழ்வாதாரத்தை இழக்க செய்யும் ஸ்டேடியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



கும்மிடியில் பயன்படாத இடத்தில் 'மினி ஸ்டேடியம்' கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மினி ஸ்டேடியம் அமைக்க, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தடகள டிராக்குடன், விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. அதிகளவில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கூடும் இடமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி உள்ளது. எனவே, சிப்காட்டை மையப்படுத்தி, மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என, இளைஞர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. நகரை விட்டு, 15 கி.மீ.,யில் உள்ள அமிர்தமங்கலம் கிராமத்தில், மினி ஸ்டேடியம் அமைக்க, 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அனாதீனம் வகையை சேர்ந்த அந்த நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்த ஒன்றிய நிர்வாகம் கையகப்படுத்தியது. தற்போது, மினி ஸ்டேடியம் நிறுவும் பணிகளை துவங்க இருக்கிறது. எனவே, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தை மையப்படுத்தி, புதுகும்மிடிப்பூண்டி, பெத்திக்குப்பம், தேர்வழி ஆகிய ஊராட்சிகளில் புதிய இடத்தை தேர்வு செய்து, மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமிர்ந்தமங்கலம் கிராமத்தில், மினி ஸ்டேடியம் ஏற்படுத்த உள்ள இடத்தை பல ஆண்டுகளாக, ஏழு குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர். வாழ்வாதாரத்தை இழக்க செய்யும் ஸ்டேடியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.








      Dinamalar
      Follow us