ADDED : அக் 11, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி, 38. இவர் நேற்று காலை, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு பேருந்தில் ஏறினார். பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஊராட்சி தலைவர் தன் சட்டை பையில் வைத்திருந்த மொபைல் போன் காணாமல் போனது. அவர் திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார்.
திருத்தணி பைபாஸ் சாலையில் கடந்த ஒரு மாதமாக பேருந்தில் முண்டியடித்து பயணியர் ஏறும் போது மர்ம நபர்கள் மொபைல்போன், பணத்தை திருடி வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட பயணியரின் மொபைல் போன் திருடுபோனதாக பாதிக்கபட்டவர்கள் கூறுகின்றனர்.
தனிப்படை அமைத்து பேருந்துகளில் மொபைல் போன் திருடும் மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

