sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழிலாளியிடம் பணம் மொபைல்போன் பறிப்பு

/

தொழிலாளியிடம் பணம் மொபைல்போன் பறிப்பு

தொழிலாளியிடம் பணம் மொபைல்போன் பறிப்பு

தொழிலாளியிடம் பணம் மொபைல்போன் பறிப்பு


ADDED : செப் 15, 2025 11:39 PM

Google News

ADDED : செப் 15, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி;நெசவு தொழிலாளியை மர்ம நபர்கள் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி மொபைல்போன் மற்றும் பணத்தை பறித்து விட்டு தப்பினர்.

திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 42; நெசவு தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இரவு 8:00 மணிக்கு திருவள்ளூரில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திருத்தணி -- பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில், தெக்களூர் ஏரிக்கரை அருகே சென்ற போது, இரண்டு வாலிபர்கள் திடீரென வாகனத்தை மறித்தனர்.

வாகனத்தை நிறுத்திய சீனிவாசனிடம், கத்தியை காட்டி மிரட்டி, 3,000 ரூபாய் மற்றும் மொபைல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us