sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிரம்பிய லட்சுமிபுரம் அணைக்கட்டு கரையோர கிராமங்கள் கண்காணிப்பு

/

நிரம்பிய லட்சுமிபுரம் அணைக்கட்டு கரையோர கிராமங்கள் கண்காணிப்பு

நிரம்பிய லட்சுமிபுரம் அணைக்கட்டு கரையோர கிராமங்கள் கண்காணிப்பு

நிரம்பிய லட்சுமிபுரம் அணைக்கட்டு கரையோர கிராமங்கள் கண்காணிப்பு


ADDED : அக் 19, 2025 10:22 PM

Google News

ADDED : அக் 19, 2025 10:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: கனமழையால் ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி வழியும் நிலையில், கரையோர கிராமங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொன்னேரி ஆரணி ஆற்றில், ஒரு மாதமாக அவ்வப்போது பெய்த மழையால், ஆற்றில் தண்ணீர் படிப்படியாக உயர்ந்து வந்தது.

நேற்று முன்தினம் பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நான்கு மணி நேரத்தில், 14 செ.மீ., மழை பெய்தது.

இந்த கனமழையின் காரணமாக, ஆரணி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி, விநாடிக்கு, 820 கனஅடி உபரிநீர் வெளியேறி, கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.

இதை தொடர்ந்து, இருபுறமும் உள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர் பெரும்பேடு, காட்டூர் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நீர்வளத்துறையினர், கரையோர பகுதிகளில், 3,500 மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, இருகரைகளை தொட்டு பயணிப்பதால், கரையோர கிராமங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us