sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களை கடித்த குரங்குகள் பிடிப்பு

/

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களை கடித்த குரங்குகள் பிடிப்பு

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களை கடித்த குரங்குகள் பிடிப்பு

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களை கடித்த குரங்குகள் பிடிப்பு


ADDED : ஆக 25, 2025 10:53 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,முருகன் மலைக்கோவிலில் பக்தர்களை கடித்த குரங்குகளை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

திரு த்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இங்கு, 70க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன.

பக்தர்கள் பூஜை செய்வதற்காக தேங்காய், வாழைப்பழம் கொண்டு செல்லும் போது, அவற்றை குரங்குகள் வழிமறித்து பிடிங்கி செல்கின்றன. சில நேரங்களில் பக்தர்களை விரட்டி கடித்து வருகிறது.

நேற்று முன்தினம், இரு போலீசார் உட்பட ஐந்து பக்தர்களை குரங்கள் கடித்தன. ஒரு மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட பக்தர்களை குரங்குகள் கடித்துள்ளன.

இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் ஒன்றிணைந்து, குரங்குகள் அதிகளவில் உலா வரும் இடத்தில் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்தனர்.

நேற்று ஒரே நாளில், 20 குரங்குகளை பிடித்து, வனத்துறையினர் வேன் மூலம் ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனர். தொடர்ந்து, குரங்குகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us