sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பராமரிப்பின்றி வீணாகி வரும் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம்

/

 பராமரிப்பின்றி வீணாகி வரும் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம்

 பராமரிப்பின்றி வீணாகி வரும் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம்

 பராமரிப்பின்றி வீணாகி வரும் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம்


ADDED : நவ 24, 2025 04:20 AM

Google News

ADDED : நவ 24, 2025 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: கார்த்திகேயபுரம் ஊராட்சியில், 40 லட்சம் ரூபாயில் ஏற்படுத்தப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.

திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சியில், கடந்த 2016 -17ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன பூங்காவும், 10 லட்சம் ரூபாயில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யும் வகையில் இயந்திரங்களுடன் அறை ஏற்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் பூங்காவிற்கு குழந்தைகள், முதியவர்கள் ஆர்வத்துடன் வந்து சென்றனர். அதேபோல், தினமும் காலை நேரத்தில், 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து வந்தனர்.

கடந்த 2021ம் ஆண்டு வரை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பராமரித்து வந்தது.

அதன்பின், பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்காததால், உடற்பயிற்சி கருவிகள் மழையில் நனைந்து வீணானது.மேலும், பூங்காவில் உள்ள விளையாட்டு கருவிகள் சேதமடைந்துள்ளன.

பூங்காவை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது. தற்போது பூங்காவில், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன.

எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, பூங்காவை பராமரிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us