sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

 வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : நவ 21, 2025 03:40 AM

Google News

ADDED : நவ 21, 2025 03:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலையில், அகூர், கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம், சமத்துவபுரம், கிருஷ்ணாகுப்பம் மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில், 25க்கும் மேற்பட்ட இடங்களில் விபத்துகல்ளை தவிர்ப்பதற்கு, நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைத்து பராமரித்து வருகின்றனர்.

இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் உள்ளதை அறியும் வகையில் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் தீட்ட வேண்டும்.

ஆனால் நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசி பராமரிக்காததால் பெரும்பாலான வேகத்தடைகளில் வர்ணம் அழிந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக வந்து, தவறி விழுந்து படுகாயம் அடைகின்றனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் வேகத்தடையில் தவறி விழுந்து காயமடைகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, வேகத்தடைகளுக்கு வர்ணம் தீட்ட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us