sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரைகுறை சாலை பணி வாகன ஓட்டிகள் திணறல்

/

அரைகுறை சாலை பணி வாகன ஓட்டிகள் திணறல்

அரைகுறை சாலை பணி வாகன ஓட்டிகள் திணறல்

அரைகுறை சாலை பணி வாகன ஓட்டிகள் திணறல்


ADDED : மே 16, 2025 02:44 AM

Google News

ADDED : மே 16, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு, அரக்கோணம் ---- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை 24 கி.மீ., உள்ளது. இச்சாலையில் திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து அரக்கோணம் வரையிலான, 9 கி.மீ., சாலையை முதற்கட்டமாக நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி 68 கோடி ரூபாய் மதிப்பில் நடந்தது.

திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் தக்கோலம், கனகம்மாசத்திரம், அரக்கோணம், திருவள்ளூர் செல்லும் சாலைகள் இணைக்கப்பட்டு ரவுண்டானா ஏற்படுத்தப்பட்டது.

ரவுண்டான பகுதியில் கனகம்மாசத்திரம் சாலையில் பணி அறைகுறையாக செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள சிறு தரைப்பாலத்தில் தார் நிரப்பி சாலை அமைக்காததால் பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இதேபோல வடாரண்யேஸ்வரர் கோவில், திருவள்ளூர் சாலையும் இணைப்பு பகுதிகள் அறைகுறையாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீர்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us