sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தேசிய நெடுஞ்சாலையில் 'பார்க்கிங்' திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்

/

தேசிய நெடுஞ்சாலையில் 'பார்க்கிங்' திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்

தேசிய நெடுஞ்சாலையில் 'பார்க்கிங்' திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்

தேசிய நெடுஞ்சாலையில் 'பார்க்கிங்' திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்


ADDED : நவ 20, 2024 01:47 AM

Google News

ADDED : நவ 20, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான சாலையோரம், ஏராளமான உணவகங்கள் உள்ளன. இங்கு வரும் வாகன ஓட்டிகள், வாகனங்களை இணைப்பு சாலையோரம் நிறுத்தி உணவருந்த செல்கின்றனர்.

ஆனால், பெருவாயல், வேர்க்காடு, கும்மிடிப்பூண்டி பைபாஸ் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு வரும் பெரும்பாலான கனரக வாகன ஓட்டிகள், இணைப்பு சாலையில் வாகனங்கள் நிறுத்துவது கிடையாது. மாறாக தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தாக வாகனங்களை நிறுத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால், அதே திசையில் பின்னால் வேகமாக வரும் பிற வாகனங்கள், சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்களால் திக்குமுக்காடி போகின்றனர். சில சமயம், நின்றிருக்கும் வாகனங்கள் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, ஆபத்தாக நிறுத்தப்படும் வாகனங்களை, இணைப்பு சாலையில் நிறுத்த வலியுறுத்த வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us